Rock Fort Times
Online News

திருச்சி 33 -வது வார்டில் ரூ.25 லட்சத்தில் மாநகராட்சி பல்நோக்கு கட்டிடம் -கவுன்சிலர் அலுவலகம்…* அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார் !

திருச்சி மாநகராட்சி மண்டலம் 2 -க்கு உட்பட்ட வார்டு- 33-ல் 2024-25 பொது நிதியிலிருந்து ரூ.25 லட்சத்தில் கவுன்சிலர் அலுவலகம், மாநகராட்சி பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று(14-02-2026) நடைபெற்றது. விழாவிற்கு மண்டல குழு தலைவர் மு.மதிவாணன் தலைமை வகித்தார். துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி வரவேற்றார். மண்டல குழு தலைவர் ஜெய நிர்மலா முன்னிலை வகித்தார். விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி பல்நோக்கு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

பின்னர் கவுன்சிலர் அறையில் வார்டு கவுன்சிலரும், துணை மேயருமான திவ்யா தனக்கோடியை இருக்கையில் அமர வைத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மாநகராட்சி உதவி ஆணையர் ஜெயந்தி, செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் இப்ராஹிம், இளநிலை உதவியாளர் ரவிக்குமார், மாவட்ட துணை செயலாளர் கவுன்சிலர் லீலா வேலு, தி.மு.க. பகுதி செயலாளர் டி.பி.எஸ்.எஸ். ராஜ்முகமது, வட்ட செயலாளர்கள் மூ.கா.முகேஷ்குமார், பி.சி.எடிங்டன், தனக்கோடி, சுரேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள், மாநகராட்சி பணியாளர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்