இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மேயர் மு.அன்பழகன், துணைமேயர் ஜி.திவ்யா தனக்கோடி, ஆணையர் லி.மதுபாலன் ஆகியோர் முன்னிலையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில், மாநகராட்சியில் மாசற்ற முறையில் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த 27 நபர்களுக்கு ரூ.2000 ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும், மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றி வரும் வார்டு குழு அலுவலக பணியாளர்கள், நகர் நல மைய அலுவலர்கள் மற்றும் உதவிஆணையர், உதவி செயற் பொறியாளர், இளநிலை பொறியாளர், பணியாளர்கள் உள்ளிட்ட 51 நபர்களை கௌரவித்து சான்றிதழ் மற்றும் கேடயத்தை மேயர் வழங்கினார். விழாவை முன்னிட்டு எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் நண்பர்கள் சிலம்பாட்டம் நடைபெற்றது. கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து திருச்சி அரசு தலைமை மருத்துவமனை அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகள் அஸ்தி மண்டபம், காந்தி மார்க்கெட் எதிரே உள்ள போர் வீரர்கள் நினைவு தூணிற்கு மேயர் அன்பழகன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியதோடு காந்தி சந்தை வளாகத்தில் உள்ள காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேற்கண்ட நிகழ்ச்சிகளில் மாநகராட்சி துணை ஆணையர் க.பாலு, ஆர்.வினோத், நகரப்பொறியாளர் ப.சிவபாதம், நகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி, மண்டலத் தலைவர்கள் துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், ஜெயநிர்மலா, செயற் பொறியாளர்கள் கே.எஸ்.பாலசுப்ரமணியன், மா.செல்வராஜ், உதவிஆணையர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Comments are closed.