பொங்கல் பண்டிகை நாளை (15-01-2026) கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பொங்கல் விழா இன்று நடைபெற்றது. இதில் ராமதாஸ் குடும்பத்தினர் மற்றும் பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர். ஆனால் பொங்கல் விழாவில் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்கவில்லை. உட்கட்சி பூசலால் விழாவை புறக்கணித்துள்ளனர். அன்புமணி இல்லாமல் தைலாபுரத்தில் நடைபெறும் முதல் பொங்கல் விழா இதுவாகும்.

Comments are closed.