தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை(ஜன. 2) திருச்சி வருகை… * கட்சி நிர்வாகிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு!
திருச்சிக்கு நாளை ( ஜன.2) வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்க, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (2-1-2026) வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். பின்னர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சமத்துவ நடைப்பயணத்தை துவக்கி வைக்கிறார். திருச்சிக்கு வருகை தரும் முதல்-அமைச்சருக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையம் முதல் குட்செட் மேம்பாலம் வரை உற்சாக வரவேற்பு
தர உள்ளோம். இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் ,வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் , மாமன்ற உறுப்பினர்கள், அனைத்து அணியை சேர்ந்த அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.