திருச்சி, ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றங்கரையில் யாத்ரி நிவாஸ் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலுக்கு நீண்ட தொலைவிலிருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்காக இங்கு குறைந்த வாடகைக்கு அறைகள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் தனது மனைவி செண்பகவல்லி மற்றும் மகள்கள் பவானி, ஜீவா ஆகியோருடன் இங்கு அறை எடுத்து தங்கினார். இந்தநிலையில் அவர்கள் நான்கு பேரும் இன்று(19-12-2025) காலை தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்த தகவலின்பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவர்கள் தங்கி இருந்த அறையில் ஒரு கடிதம் இருந்தது. அதில், வயது முதிர்வு காரணமாக நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்கள் மரணத்திற்கு பிறகு பிள்ளைகள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக அவர்களையும் எங்களுடன் அழைத்துச் செல்கிறோம் என்று உருக்கமாக எழுதப்பட்டு இருந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

Comments are closed.