திமுக முன்னாள் பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் மறைந்த மு.அன்பழகன் 103- வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி, தில்லை நகரில் உள்ள மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அன்பழகன் திருஉருவப் படத்திற்கு கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் மத்திய மாவட்ட கழக செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மேயர் மு. அன்பழகன், கட்சி நிர்வாகிகள் சேர்மன் துரைராஜ், விஜயா ஜெயராஜ், கருணாநிதி, பகுதி செயலாளர்கள் கமல் முஸ்தபா, மோகன்தாஸ், இளங்கோ, மண்டல தலைவர் துர்கா தேவி, ஒன்றிய செயலாளர்கள் கே கே.ஆர். சேகரன், வீரபத்திரன் , முத்து பழனி, கவிதா மற்றும் பலர் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Comments are closed.