Rock Fort Times
Online News

திருச்சி, பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மேயர் மு.அன்பழகன் ஆய்வு…!

திருச்சி, பஞ்சப்பூரில் ரூ.408 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. இதன் அருகிலேயே ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கும் பிரம்மாண்ட ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அந்தப் பணிகளை மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ஆம்னி பேருந்து கட்டுமான பணிகள் 85 சதவீதம் முடிவடைந்து உள்ளது. விரைவில் மீதமுள்ள பணிகள் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார். இந்த ஆய்வின் போது செயற்பொறியாளர் கே.எஸ். பாலசுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் வேல்முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்