Rock Fort Times
Online News

கார்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்…!

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலய திருகார்த்திகை தீபத்திருவிழா இன்று( டிச.3) நடைபெறுகிறது. இதனையொட்டி இன்று அதிகாலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் திருகார்த்திகை தீபத்திருவிழா வெகுசிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு்க்கான தீபத்திருவிழா கடந்த மாதம் 24-ம் தேதி தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக தீபத்திருவிழா இன்று நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைதொடர்ந்து இன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் சன்னதி முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதன்பின் அண்ணாமலையார் கருவறை பிரகாரத்தை சுற்றி வந்து காட்சி அளித்த பின்னர் அம்மன் சன்னதியிலும் தீபம் ஏற்றப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு நாடுகளிலிருந்தும் தீபத்திருவிழாவை காண திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்துள்ளனர். மேலும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். மாநகருக்கு வந்துள்ள பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரமுள்ள அண்ணாமலையார் மலையை சுற்றி வந்து அஷ்டலிங்கங்களை வணங்கி வழிபட்டு வருகிறார்கள். இன்று மாலை கோயிலில் உள்ள தீபதரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள உள்ளனர். அப்போது ஆண்டிற்கு ஒருமுறை ஒரு நிமிடம் மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரிஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுக்கு காட்சி தர அப்போது சரியாக 6 மணிக்கு 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.. இன்று மாலை ஏற்றப்படும் மகா தீபம் 11 நாட்களுக்கு தீபஜோதியாக காட்சி தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்