திருச்சி மாநகராட்சி சார்பில் குறை தீர்க்கும் கூட்டம்: பொதுமக்கள் மனுக்கள் மீது உரிய தீர்வு காணப்படும் என மேயர் மு.அன்பழகன் உறுதி…!
திருச்சி மாநகராட்சி சார்பில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (01.12.2025) கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமை தாங்கினார். துணை மேயர் திவ்யா தனக்கோடி, ஆணையர் மதுபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வார்டு பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட அவர், இது குறித்து உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். கூட்டத்தில், மண்டலத் தலைவர்கள் துர்கா தேவி, ஜெயநிர்மலா, நகரப் பொறியாளர் பி.சிவபாதம் மற்றும் நகர்நல அலுவலர், செயற் பொறியாளர்கள், உதவி ஆணையர்கள் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

Comments are closed.