திருச்சி, திருவெறும்பூர் அரசு பள்ளியில் புதிய சமையல் கூடத்தை திறந்து வைத்தார், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வைப்பறையுடன் கூடிய சமையல் கூடத்தினை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாநகர கழக செயலாளர் மு.மதிவாணன், பகுதி செயலாளர் நீலமேகம், மாமன்ற உறுப்பினர் தாஜுதீன் மாவட்ட கல்வி அதிகாரி கிருஷ்ணபிரியா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments are closed.