டில்லியில் எம்.பி.க்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு…! (வீடியோ இணைப்பு)
டில்லியில் பி.டி. மார்க்கில் உள்ள பிரம்மபுத்ரா அடுக்குமாடி குடியிருப்பில் ராஜ்ய சபா எம்.பி.க்கள் வசிக்கின்றனர். 2020ம் ஆண்டு இந்தக் கட்டிடம் புதிதாக கட்டி திறந்து வைக்கப்பட்டது.
பார்லிமென்டிற்கு 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பு, எம்பிக்களுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ குடியிருப்புகளில் ஒன்றாகும். இந்நிலையில் இன்று(அக்.18) குடியிருப்பு வளாகத்தின் மேல் தளம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அங்கு குடியிருப்பவர்களிடையே பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர்.
Comments are closed.