திருச்சியில் வலிப்பு நோயால் சாலையில் விழுந்து கிடந்தவருக்கு உதவி செய்து காரில் ஏற்றி அனுப்பி வைத்த அமைச்சர் கே.என்.நேரு…!
தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரான கே.என்.நேரு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு திருச்சி -:
சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருவானைக்காவல் பகுதியில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக டூவீலரில் சென்ற நபர் ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு சாலையில் விழுந்து காப்பாற்ற யாரும் இல்லாமல் போராடிக் கொண்டிருந்தார். இதைக்கண்ட அமைச்சர் கே.என். நேரு உடனடியாக தனது காரை நிறுத்த சொல்லி, வலிப்பு நோயால் போராடிக் கொண்டிருந்த நபருக்கு முதலுதவி செய்ததோடு, உடனடியாக அவரை காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டார். அவரது இந்த மனிதநேய பண்பினை
அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வெகுவாக பாராட்டினர்.

Comments are closed.