Rock Fort Times
Online News

வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றக்கோரி திருச்சி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!

வழக்கறிஞர்களுக்குக்கென பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் மற்றும் படுகொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வக்கீல் சங்க தலைவர் எஸ்.பி கணேசன், செயலாளர் சி. முத்துமாரி ஆகியோர் தலைமையில் இன்று(28.06.2025) திருச்சி நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பார் கவுன்சில் உறுப்பினர் வக்கீல் ராஜேந்திர குமார், ஜாக் செயலாளர் பன்னீர்செல்வன், துணைத்தலைவர் வடிவேல்சாமி, இணைச்செயலாளர் விக்னேஷ், பொருளாளர் சதீஷ், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், குற்றவியல் வழக்கறிஞர் சங்கர், துணைத்தலைவர் சசிகுமார், குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க பொருளாளர் எஸ்.ஆர். கிஷோர்குமார், வக்கீல் சங்க செயற்குழு உறுப்பினர்கள் சேது மாதவன், சந்திரமோகன், ராஜ்குமார், முகமது சதாம், புவனேஸ்வரி, வழக்கறிஞர்கள் தீனா, தியாகராஜன், போஸ், முத்துகிருஷ்ணன், முருகானந்தம் மற்றும் திரளான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றக்கோரி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர். இதனால், நீதிமன்ற பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்