திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் மினி பேருந்து வசதியை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி கிராமங்களுக்கும் பேருந்து வசதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் “மினி பேருந்து” வசதியை தமிழ்நாடு அரசு உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மினி பேருந்து சேவையை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (25-06-2025) துவக்கி வைத்தார். பின்னர் அந்த மினி பேருந்தில் சிறு தூரம் பயணம் மேற்கொண்டார். இந்நிகழ்வில் கிழக்கு மாநகரச் செயலாளர் மு.மதிவாணன், பகுதிக் கழகச் செயலாளர்கள் நீலமேகம், சிவக்குமார், திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி, தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த 2 மினி பேருந்துகள் 2 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. கீழ்கண்டார்கோட்டை, ஆலத்தூர், மேல கல்கண்டார் கோட்டை, கணேசபுரம் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் வரை ஒரு மினி பேருந்தும், திருவெறும்பூரில் இருந்து புறப்பட்டு வீதிவடங்கம் வழியாக சத்திரம் பேருந்து நிலையத்திற்கு மற்றொரு மினி பேருந்தும் இயக்கப்படுகின்றன.
Comments are closed.