திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட உயரழுத்த மின்பாதையில் நாளை (21.06.2025) அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக நாளை சனிக்கிழமை காலை 9-45 மணி முதல் மாலை 4 மணிவரை அருணாச்சல நகர், டி.எஸ்.பி.கேம்ப், கிராப்பட்டி காலனி, காந்தி நகர், பாரதி மின்நகர், அன்புநகர், சிம்கோ காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, கொல்லாங்குளம், எடமலைப்பட்டிபுதூர், அரசுகாலனி, ராமச்சந்திரா நகர், ஆர்எம்எஸ் காலனி, கேஆர்எஸ் நகர், ராஜீவ்காந்தி நகர், கிருஷ்ணாபுரம், செட்டியபட்டி, அன்பிலார் நகர், பஞ்சப்பூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய திருச்சி கிழக்கு செயற்பொறியாளர், இயக்குதலும் காத்தலும், எம்.கணேசன் தெரிவித்துள்ளார்.
Comments are closed.