திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் ஐனுநிஷா (70). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் தனது பென்ஷன் தொடர்பாக துறையூரில் உள்ள வங்கிக்கு தனது மகன் ரகுபாஷா, அவரது மனைவி ரெஜினா பேகம், ரகு பாஷா தங்கை மகள் பசிலா உள்ளிட்ட 6 பேருடன் ஒரு காரில் சென்று கொண்டிருந்தார். புலிவலம் பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது திருச்சியிலிருந்து பயணிகளுடன் துறையூர் நோக்கி வந்த தனியார் பேருந்தும், காரும் எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இதில் அந்த கார் முழுவதும் நொறுங்கியது. இதில், ரெஜினா பேகம்(45) பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். ரகுபாஷா, ஐனுநிஷா உள்ளிட்ட 4 பேர் படுகாயம் அடைந்தனர். ஒரு குழந்தை மட்டும் காயம் இன்றி உயிர் தப்பியது. தகவல் அறிந்த புலிவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிர் இழந்த ரெஜினா பேகம் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து புலிவலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.