Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டத்தில் நாளை (ஜூன் 17) மின்தடை செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு…!

பராமரிப்புப் பணிகள் காரணமாக பொன்மலை, வாழவந்தான் கோட்டை பகுதிகளில் நாளை (17.06.2025) செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், வாழவந்தான் கோட்டை துணை மின்நிலையத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் காரணமாக ஜெய் நகர், கிளியூர், தொண்டைமான்பட்டி, திருவேங்கட நகர், தமிழ் நகர், திருநெடுங்குளம், கணேசபுரம், பெல் நகரியம் சி, டி பிரிவுகளில் ஒரு பகுதி, வாழவந்தான் கோட்டை, சிட்கோ தொழிற்பேட்டை, கணபதி நகர், சொக்கலிங்கபுரம், பெரியார் நகர், கீழகுமரேசபுரம், இம்மானுவேல் நகர், ரெட்டியார் தோட்டம், மேலகுமரேசபுரம், வ.உ.சி. நகர், ஈச்சங்காடு, கூத்தைப்பார், எழில் நகர், பர்மா நகர், கிருஷ்ணசமுத்திரம், அய்யம்பட்டி, மாங்காவனம், பத்தாளப்பேட்டை ஆகிய பகுதிகளில் காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதேபோல, அம்பிகாபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அரியமங்கலம், ராணுவ காலனி, எஸ்.ஐ.டி. பாப்பாக்குறிச்சி, அம்பிகாபுரம், கைலாஷ் நகர் ரயில் நகர், சக்தி நகர், நேருஜி நகர், ராஜப்பா நகர், காமராஜ் நகர், எம்.ஜி.ஆர். நகர், மலையப்ப நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜி நகர், காட்டூர், மேலகல்கண்டார் ககோட்டை திருநகர், கீழகல்கண்டார்
கோட்டை, நத்தமாடிப்பட்டி, வெங்கடேஸ்வரா நகர், கீழக்குறிச்சி, கொட்டப்பட்டு ஒரு பகுதி, ஆலத்தூர், அடைக்கல அன்னை நகர், பொன்மலை, அரியமங்கலம் தொழிற்பேட்டை, செந்தண்ணீர்புரம், சிட்கோ காலனி, விண் நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மணப்பாறை துவரங்குறிச்சி:

மணப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இந்த மின் நிலையத்திலிருந்து தோகைமலை பீடர் மற்றும் பொடங்குபட்டி பீடரிலிருந்து மின் விநியோகம் பெறும் தொப்பம்பட்டி, என்.புதூர், டி. உடையாப்பட்டி, ஆண்டவர் கோயில், ஆட்டோ நகர், சீகம்பட்டி, சின்னமனபட்டி, ஓ.எச்.டி. மேட்டுக்கடை பால் பண்ணை மற்றும் தவுட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இந்த மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் துவரங்குறிச்சி, செவல்பட்டி, பிடாரப்பட்டி, வெங்கட்நாயக்கன் பட்டி, வேளக்குறிச்சி, மருங்காபுரி, காரைப்பட்டி, கரடிப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை
4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளர் இரா.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்