Rock Fort Times
Online News

மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்கள் விரும்பிய இடத்திற்கு ட்ரான்ஸ்ஃபர்…!

மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்கள், தங்களது குழந்தைகளை கவனித்துக்கொள்ள ஏதுவாக, விரும்பிய இடத்திற்கு பணியிட மாறுதல் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவல் ஆளிநர்களுக்கு, அவர்கள் விரும்பும் மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து, மொத்தம் 209 பெண் காவல் ஆளிநர்கள் தங்களது பேறுகால விடுப்பிற்குப் பிறகு குழந்தைகளை கவனித்துக்கொள்ளஏதுவாக மற்ற மாநகரம், மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அதன்படி, 03.06.2025 வரை பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்தமேற்கண்ட 209 பெண் காவல் ஆளிநர்களுக்கும் அவர்கள் விரும்பிய மாநகரம், மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்