தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி அசிஸ்டன்ட் இன்ஜினியர், அசிஸ்டன்ட் அக்கௌன்ட் ஆபீஸர், அசிஸ்டன்ட் ப்ரோக்ராமர், கணக்காளர் உள்ளிட்ட மொத்தம் சுமார் 418 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிகளுக்கு அதிகபட்சம் 32 வயது வரை விண்ணப்பிக்கலாம் என்றாலும், சில பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணிக்கேற்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியானவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிகளுக்கான தேர்வு வருகிற ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான மேலும் தகவல்களை பெற விரும்பினால் apply.tnpscexams.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற ஜூன் 25.
Comments are closed.