திருச்சி வந்த விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த இரண்டு கிலோ கஞ்சா பொட்டலம்- கடத்தி வந்தது யார்? ரயில்வே போலீசார் விசாரணை…!
ஹவுராவிலிருந்து ஹவுரா விரைவு ரயில் திருச்சி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அந்த ரயிலில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் செபாஸ்டின் தலைமையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது அந்த ரயிலில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பெரிய பொட்டலம் கிடந்தது. அதற்கு யாரும் உரிமை கொண்டாடாததால் கேட்பாரற்று கிடந்த அந்த பொட்டலத்தை எடுத்து போலீசார் சோதனை செய்ததில் அதில் 2.200 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது. அதனை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து அந்த கஞ்சாவை கடத்தி வந்தது யார்?, எங்கிருந்து கடத்தி வந்தார்? யாரிடம் கொடுக்க எடுத்து வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனைத்தொடர்ந்து அந்த கஞ்சாவை அழிப்பதற்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Comments are closed.