Rock Fort Times
Online News

அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் அமையுமா? – திருச்சியில் செங்கோட்டையன்…!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வருகை தந்தார். முன்னதாக அவரை செய்தியாளர்கள் சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்று வந்த தொகுதி. ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் சில துரோகிகளால் அதிமுக தோல்வியை சந்தித்தது.
பா.ஜ.க உடன் அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என ஓபிஎஸ் பேசி இருப்பது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். கட்சியின் மூத்த தலைவர் என்றால் எல்லா கருத்தையும் பேசி விட முடியாது. அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்பதெல்லாம் இல்லை. அமைதியாக அவர வர் வேலையை பார்த்து கொண்டிருந்தால் நல்லது. நீதிமன்ற வழக்கு தொடர்பாக சி.வி.சண்முகம் தான் பதில் கூறுவார். அவர்தான் எல்லா பதிலும் கூறுகிறார். நான் சாதாரண தொண்டன், என்னிடம் கேட்கும் கேள்விகளை பொதுச்செயலாளரிடம் தான் கேட்க வேண்டும். அதிமுக – பா.ஜ.க கூட்டணி வைக்குமா? என்பது குறித்தும் பொதுச்செயலாளரிடம் தான் கேட்க வேண்டும். விவசாயிகள் நடத்திய கூட்டத்தை நான் புறக்கணிக்கவில்லை. அதில், முன்னாள் முதல்- அமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம் பெறாததால் கலந்து கொள்ளவில்லை அவ்வளவுதான். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்