திருச்சி, ராம்ஜி நகர் மாரியம்மன் கோயில் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் அப்பகுதிக்கு விரைந்து சென்றார். அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரியா என்பவரை அவர் கைது செய்தார். அவரிடம் இருந்து 55 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதேபோன்று அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரைஸ் மில் பஸ் ஸ்டாப் அருகில் கஞ்சா விற்பனை செய்த ஞான ஆரோக்கியம் என்பவரும் கைது செய்யப்பட்டார். திருச்சி, உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட தில்லைநகர் புது காலனியை சேர்ந்த மகேந்திரன், மணிகண்டன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
Comments are closed.