திருச்சி, கருமண்டபம், ஜெயா நகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி ஜஸ்டின் க்ளாரா (46). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வேலையை முடித்துவிட்டு வீடுதிரும்பியபோது அவரது வீட்டின் அருகே எதிர் புறமாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் க்ளாரா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டார். இதுகுறித்து க்ளாரா அளித்த புகாரின்பேரில் செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.