திருச்சி ஜில்லா நாயுடு மஹாஜன சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் “சம்பந்தம் பேச வாங்க” என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்தவகையில் 15-ம் ஆண்டாக சங்க திருமண மண்டபத்தில், கடந்த 29-12-2024 ஆம் தேதி ஞாயிறு அன்று ” சம்பந்தம் பேச வாங்க” நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஜாதக பரிவர்த்தனை, மணமக்கள், பெற்றோர்கள் அறிமுக விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து டாக்டர்கள், இன்ஜினீயர்கள், ஐ.டி, தொழில் முனைவோர் வியாபாரிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருமணம் செய்ய விரும்புவோர், மறுமணம் புரிவோர் ஆகியோர் மேடையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். மணமகளுக்கு பட்டுப்புடவைகள் தாம்பூலத்துடன் வழங்கப்பட்டது. இதில், நாயுடு சமூக மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களுக்கு பிடித்தமான வரனை தேர்ந்தெடுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை சங்கத்தலைவர் பி.விஜயகுமார் நாயுடு, செயலாளர் எஸ். கோவிந்தராஜுலு நாயுடு, பொருளாளர் ஆர்.பிரபுராம் நாயுடு மற்றும் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், இளைஞர் அணியினர்,மகளிர் அணியினர் சிறப்பாக செய்திருந்தனர்.
Comments are closed.