கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயில் பகுதியைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். அவருக்கு, விருதாச்சலம் அருகே உள்ள கொக்கான் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமநாதன் மகன் விஜயகுமார் என்பவர், தவறான முறையில் செல்போன் மூலம் “மெசேஜ்” அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் காவலர் அளித்த புகாரின்பேரில் காட்டுமன்னார் கோயில் போலீசார், விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவர், பா.ஜ.க.ஓபிசி அணி மாவட்ட செயலாளர் பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.