Rock Fort Times
Online News

திருச்சி மாநகர பகுதியில் கஞ்சா விற்ற 6 பேர் சிக்கினர்…!

திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கதுரை தலைமையில் போலீசார் ராம்ஜி நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ராம்ஜி நகர் மில் காலனி மாரியம்மன் கோவில் அருகாமையில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த சந்தோஷ் குமார் (வயது 40) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை கைப்பற்றினர். ஸ்ரீரங்கம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், பழைய கொள்ளிடம் பாலம் அழகிரிபுரம் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த பாலா என்கிற தனபால் ( 26 ) என்பவரை கைது செய்தார். இதேபோன்று பாலக்கரை காவல் நிலையத்துக்கு உட்பட்ட கெம்ஸ் டவுன் புதிய ரயில்வே ட்ராக் பகுதியில் கஞ்சா விற்ற பாலக்கரை ஆட்டுக்கார தெரு பகுதியை சேர்ந்த கௌரிஸ் என்கிற நவநீத கிருஷ்ணன் ( 27 ) என்பவர் சிக்கினார். தில்லை நகர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தென்னூர் சின்னசாமி நகர் பகுதியில் கஞ்சா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த பீர்முகமது ( 28 ) என்பவரை கைது செய்தார். மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த முருகன் ( 58 )என்பவரை கைது செய்தனர். இதேபோன்று மதுவிலக்கு பிரிவு சிறப்பு போலீசார் திருச்சி கருமண்டபம் கோரையாறு கரை பகுதியில் கஞ்சா விற்ற சந்தோஷ் (40) என்பவரை கைது செய்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்