Rock Fort Times
Online News

திருச்சியில், தனியார் கம்பெனியில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.4.53 லட்சம் மோசடி: 4 பேர் மீது வழக்கு…!

திருச்சி புத்தூர் மேல வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 52). இவரிடம் தில்லை நகர் பகுதியை சேர்ந்த 4 நபர்கள் அறிமுகமாகி ஒரு தனியார் டிரேடிங் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை உண்மை என்று நம்பிய ஸ்ரீதர் ரூ.4 லட்சத்து 53 ஆயிரத்தை அந்த தனியார் கம்பெனியில் செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், குறிப்பிட்ட காலம் முடிந்தும் லாபத் தொகையை அந்த நிறுவனம் கொடுக்கவில்லை. செலுத்திய பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து தில்லைநகர் போலீசில் ஸ்ரீதர் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்