Rock Fort Times
Online News

சேலத்தில் பட்டப் பகலில் பயங்கரம்: ஓட, ஓட விரட்டிச் சென்று பிரபல ரவுடி வெட்டிக்கொலை…!

சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் அடுத்துள்ள வெள்ளியம்பட்டியில் வசித்து வந்தவர் பிரபல ரவுடியான பட்டறை சரவணன். வாழப்பாடி பகுதியில் பீரோ பட்டறை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. சரவணன் தன்னுடைய காரில் இன்று(8-11-2024) வெள்ளாளகுண்டம் சென்று விட்டு அங்கிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வலசையூர் அடுத்துள்ள பனங்காடு பகுதியில் சென்ற போது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரது காரை வழிமறித்து அவரை வெளியே இழுத்துத் தாக்கியுள்ளனர். அவர்களது பிடியிலிருந்து தப்பி ஓடிய சரவணனை ஓட ஓட விரட்டி சென்று பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்த தகவலின்பேரில் காரிபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சரவணன் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை வெட்டி கொலை செய்த வர்கள் யார்?, எதற்காக கொலை செய்தனர் என்று போலீசார் விசாரணை நடத்தி னர். முதல் கட்ட விசாரணையில் கொலையான சரவணன் பிரபல ரவுடியான காட்டூர் ஆனந்தன் என்பவரை கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என்பது தெரிய வந்தது. இந்தக் கொலையில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்