புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் 201 நபர்கள் சிகிச்சைக்காக வந்தனர். மருத்துவமனைக்கு வந்தவர்களில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் விபரம் வருமாறு: புதுச்சேரி -16 நபர்கள், காரைக்கால் -13 நபர்கள், ஏனாம் -3 நபர்கள் என மொத்தம் 33 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்தார். இவர்கள் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை மற்றும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்…