Rock Fort Times
Online News

அரசு விழாக்களுக்கு அமைச்சர் அழைக்காததால் லால்குடி திமுக எம்எல்ஏ பதிவிட்ட போஸ்டால் கட்சியில் திகு…திகு…!

திருச்சி மாவட்டம்  லால்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சௌந்தர பாண்டியன். இதே தொகுதியில் கடந்த 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர் தற்போது நான்காவது முறையாக வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.  இந்நிலையில் திமுகவில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும், அரசு விழாக்களுக்கு தன்னை அழைப்பதில்லை என்றும் கூறி  சமீபத்தில் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல்கள் பரவின.  இதுதொடர்பாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்,  அமைச்சர் கே.என்.நேரு மற்றும் சௌந்தரபாண்டியன் இருவரையும் நேரில் அழைத்து சமாதானம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது .  இந்நிலையில்  நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் லால்குடி தொகுதியில் வட்டாட்சியர் அலுவலகம்,  பத்திரப்பதிவு கட்டிடம் அமைப்பதற்கான இடம் குறித்து ஆய்வு மேற்கொண்டு இதில் அரசு அதிகாரிகள், மண்டல தலைவர்கள்,  உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டதாக புகைப்படங்களுடன் பதிவு செய்திருந்தார்.  அந்த பதிவை பார்த்த லால்குடியை சேர்ந்த சிலர், சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியனை காணவில்லை, எம்.எல்.ஏ.என்ன ஆனார்?, மண்ணின் மைந்தனை காணவில்லை என கமெண்ட் தெரிவித்து இருந்தனர்.

இதனைப் பார்த்த லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன்  கோபத்தின்  உச்சிக்கே சென்று,  தன்னை எந்த அரசு விழாக்களுக்கும், அமைச்சர் அழைப்பதில்லை மேலும் தனது தொகுதியில் வட்டாட்சியர் அலுவலகம்,  பத்திரபதிவு அலுவலகம் கட்டிடம் கட்டுவதற்காக இடங்களை ஆய்வு மேற்கொண்டபோது  தன்னை அழைக்காத காரணத்தினால்  “லால்குடி எம்எல்ஏ  இயற்கை எய்து விட்டதால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது” என பதிவிட்டுள்ளார்.  திமுக சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன் பதிவிட்ட இந்த பதிவு திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  இதுதொடர்பாக கட்சி மேலிடம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதுதான் திமுகவினர் மத்தியில் ஹை டாபிக்காக உள்ளது.
*

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்