அங்கக வேளாண்மையில் சாதனை படைக்கும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது மற்றும் 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் இயற்கை விவசாயி நம்மாழ்வாருக்கு என்று தனி பெருமை உள்ளது. அவரது மரணத்திற்கு பிறகு நம்மாழ்வார் ஆற்றிய பணிகளை ஒவ்வொரு விவசாயிகளும் கடைப்பிடித்து வருகின்றனர் நடைமுறைப்படுத்திவருகின்றனர். இந்த நிலையில் இன்று நடந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் அங்கக வேளாண்மையில் தொடர்ந்து நம்மாழ்வாரை போல் சாதனை படைக்கும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படுவதாகவும் 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.