திருச்சி மாநகரில் வசிக்கும் தெருகூத்து மேடை கலைஞருக்கு (பெண்) நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அதில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மூத்த மகள் வீட்டில் சரியாக யாரிடமும் பேசாமல் இருந்து வந்தது ,அந்த பெண்ணின் தாய்க்கு சந்தேகத்தை எழுப்பியது. மகளை துருவித் துருவி கேட்டதற்கு , அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் சுரேஷ் என்பவர் தொடர்ந்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததை தாயிடம் கூறினார். பைனான்ஸ் தொழில் மற்றும் கட்டிட காண்ட்ராக்ட் தொழில் செய்து வரும் சுரேஷ் என்பவர் தான் அந்த காம வெறியன். சுரேஷுக்கு அந்த மாணவியின் வயதையொத்த மகள் உள்ளார். இவரது மகளும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியும் தோழிகள். கடந்த 10 ஆண்டுகளாக அந்த 2 குடும்பத்தினருக்குமிடையே நல்ல நட்புறவு இருந்துள்ளது. அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, தன் மகளைப் பார்க்க வீட்டிற்கு வரும் மாணவியை மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துவந்துள்ளார்.இதுகுறித்து மாணவி தனது தாயிடம் நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறியுள்ளார். அதில் அதிர்ச்சி அடைந்த தாய் உடனடியாக இதுகுறித்து மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தார். திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியாவின் உத்தரவின் பெயரில் சுரேஷ் கைது செய்யப்பட்டார்..