வேலூர் மாவட்டத்தில் திட்ட இயக்குனராக பணியாற்றி வருபவர் ஆர்த்தி.அவரது கணவர் ஆனந்த மூர்த்தி சென்னையில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இருவரும் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரையடுத்து சென்னை தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்த்தியின் தந்தை கலைமணி(72 )ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி.திருச்சி காஜாமலை பகுதியில் பிச்சையம்மாள் நகரில் அவரது வீடு உள்ளது. அவரது வீட்டில் ஆய்வு செய்ய லஞ்ச ஒழிப்பு உயர் அதிகாரிகளிடமிருந்து உத்தரவு பறந்தது. அதன்படி கலைமணி வீட்டில் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி மணிகண்டன், ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் என 3 பேர் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது. அதில் கடந்த 2013 ஆம் ஆண்டு சூரியூர் பகுதியில் 72 ஏக்கரில் கோழிப்பண்ணை அமைக்க இடம் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆய்வு இன்னும் முழுமை பெறவில்லை மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.