Rock Fort Times
Online News

திருச்சியில் மது போதையில் மயங்கி விழுந்த ஆசாமியிடம் கொள்ளை..

தஞ்சை இ.பி காலனியை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகன் தங்கவேல் (வயது 32). இவர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள ஒரு தனியார் ஆர்.ஓ பிளான்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் .இவர் நேற்று முன்தினம் திருச்சி வந்தார். திருச்சியில்  மது அருந்தினார் .பின்னர் ரயில் நிலையம் அருகே மயங்கி விழுந்தார். அப்போது இதை பயன்படுத்திக் கொண்ட அடையாளம் தெரியாத மூன்று மர்ம நபர்கள் இவரிடம் இருந்த செல்போன்,வாட்ச், மோதிரம், பிரேஸ்லெட் ,பேக் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். உடனே இவர் இது குறித்து கன்டோன்மெண்ட் போலீசில் புகார் கொடுத்தார் .புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கியஜானிட் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்