Rock Fort Times
Online News

திருச்சியில் துணிகரம்: ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை, பணம் திருட்டு…

திருச்சி கே.கே.நகர் கே.சாத்தனூர் பிரேம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த செல்வம். இவர் சென்னை பரங்கி மலையில் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி மற்றும் குடும்பத்தினர் கே.கே. நகர் வீட்டை பூட்டிவிட்டு தில்லை நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில் நேற்றைய தினம் கே.கே.நகர் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டு கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் கலைச்செல்வி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்