Rock Fort Times
Online News

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு.

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷே மண்டல பூஜை இன்று நிறைவு பெற்றுள்ளது. பழனி முருகன் கோவிலில் கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக மண்டல பூஜையானது இன்று நிறைவுபெற்றது. இதையொட்டி இன்று பழனி முருகன் கோவிலில் காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அப்போது விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், பஞ்சகவ்ய பூஜை, கலசபூஜை, 1008 சங்காபிஷேகம், பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றது. மண்டல பூஜை நிறைவு நாளையொட்டி இன்று காலை 8.30 மணிக்கு 2-வது காலபூஜை, பாராயணம் நடைபெற்றது. நண்பகல் பூர்ணாகுதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து உச்சிகால பூஜையில் சங்காபிஷேகம், கலசாபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தன. மண்டல அபிஷேக பூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்