திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர்- சமயபுரம் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள தனியார் அரவை மில் எதிரில் வசித்தவர் சந்திரன்( வயது 65). சமையல் மாஸ்டர். இவரது மனைவி ராஜாமணி. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என கூறப்படுகிறது. கடந்த மாதம் 26 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்ற சந்திரன் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரை, மனைவி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரை உறவினர்கள் தொடர்ந்து தேடி வந்த நிலையில் மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள புதர் பகுதியில் சந்திரன் பிணமாக கிடந்தார். அவரது உடல் அழுகி இருந்தது. அவரது தலை மற்றும் உடல் பகுதியை நாய்கள் கடித்து குதறி இருந்தன. அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் இதனை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சமையல் மாஸ்டர் எப்படி இறந்தார்?, அவரை யாரேனும் கொலை செய்து புதர் பகுதியில் வீசி சென்றார்களா? அல்லது உடல்நல குறைவு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பன போன்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.