மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழை வெள்ளம் ஏற்பட்ட காரணத்தால் பொது சுகாதார தூய்மைப் பணி மேற்கொள்வதற்காக திருச்சி மாநகராட்சியில் இருந்து வெள்ள தடுப்பு பணி மற்றும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள தூய்மை பணியாளர்கள் 250 பேர், சுகாதார மேற்பார்வையாளர்கள் 10 பேர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் 3பேர் உள்ளிட்டவர்கள் ஐந்து பேருந்துகளில் வெள்ள தடுப்பு பணி உபகரணங்களுடன் புறப்பட்டனர். அவர்கள் செல்லும் பேருந்துகைளை திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் கொடி அசைத்து வழி அனுப்பி வைத்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.