திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக இளைஞரணி மாவட்ட, மாநகர அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது.இதில் கலந்து கொள்ள திருச்சி வந்த திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலைஞர் அறிவாலயத்தில் கலைஞர் மற்றும் அறிஞர் அண்ணாவிற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் நிர்வாக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நா.தியாகராஜன், மேயர் அன்பழகன், மாநகர செயலாளர் மதிவாணன், எம்.எல்.ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், சவுந்தரபாண்டியன், பழநியாண்டி, ஸ்டாலின் குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.