குட்கா வியாபாாிகளுடன் தொடா்பு – ஸ்ரீரங்கம் முதல்நிலை காவலா் சஸ்பெண்ட்…
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் என்.காமினி ஐபிஎஸ் அதிரடி..
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக என்.காமினி ஐபிஎஸ் பொறுப்பேற்றது முதல் பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சமூக விரோத செயல்களை தடுக்கவும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரும் காளிமுத்து என்பவர் குட்கா வியாபாரிகளிடம் தொடர்பு வைத்துள்ளதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் என். காமினி ஐபிஎஸ், போலீஸ்காரர் காளிமுத்துவை அதிரடியாக சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.