கரூர் அருகே இளம் பெண் தனது தோழிக்கு உணவில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து மூன்று பவுன் சங்கிலி, செல்போன் ஆகியவற்றை திருடி சென்றுள்ளாா். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நித்யா,பழனியப்பன் தம்பதியினா். இவரது வீட்டிற்க்கு அருகே கடந்த நான்கு வருடங்களாக கிருத்திகா என்ற பெண் தனது கணவர் மற்றும் நான்கு வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கிருத்திகாவின் கணவர் இறந்த நிலையில், 4 வயது மகனை தனது மாமியார் வீட்டில் விட்டுவிட்டு கிருத்திகா இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, கேரளா சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை மீண்டும் கரூர் வந்த கிருத்திகா, தற்போது இரண்டாவது கணவருடன் தூத்துக்குடியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். செல்லாண்டிபாளையத்தில் உள்ள நித்யா வீட்டிற்க்கு வந்த கிருத்திகா தனது வங்கி ஆவணங்களை தூத்துக்குடி முகவரிக்கு மாற்றுவதற்காக கரூர் வந்ததாக தெரிவித்துள்ளார். அதிகாலை நேரத்தில் வந்ததால் நித்யா அவரை ஓய்வு எடுக்க கூறியுள்ளாா். இதனைத் தொடர்ந்து நித்யாவின் வீட்டில் இருப்பவர்கள் வெளியே சென்ற பிறகு மதிய உணவை தானே சமைத்துக் கொடுப்பதாக கூறி, கிருத்திகா சாப்பாட்டில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. உணவை சாப்பிட்ட நித்யா மயக்கம் அடைந்துள்ளார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து பார்த்தபோது அவரது மூன்று பவுன் தங்க சங்கிலி, செல்போன்னை கிருத்திகா எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது. இதனைப்பற்றி குடும்பத்தினரிடம் தெரிவித்த நித்யா, சம்பவம் குறித்து தாந்தோணிமலை காவல்துறையினாிடம் புகார் கொடுத்ததின் போில் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நான்கு வருடங்களுக்கு மேலாக தோழியாக பழகி வந்த இளம் பெண் உணவில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து நகை மற்றும் செல்போனை திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.