Rock Fort Times
Online News

தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்…

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா   4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்தும், 2 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளுக்கு பதவிகள் வழங்கியும் உத்தரவிட்டுள்ளார். அதன்படி விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை சிறப்பு செயலாளராக இருந்த ஆர்.நந்தகோபால் ஐஏஎஸ், ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறையின் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் செயலாளராக இருந்த ராஷ்மி சித்தார்த் ஸகடே ஐஏஎஸ், சென்னை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த எம்.அருணா ஐஏஎஸ், நீலகிரி மாவட்ட ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ்.பி.அமிர்த் ஐஏஎஸ், நில நிர்வாகத்துறை இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சிறப்பு செயலாளர் ஹனிஷ் சாப்ரா ஐஏஎஸ், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் (TUFIDCO) மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பணியில் இருந்த நீரஜ் மிட்டல் ஐஏஎஸ் சமீபத்தில் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் விழுப்புரம் மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு ஏஜென்சியின் கூடுதல் ஆட்சியர் சித்ரா விஜயன் ஐஏஎஸ், தமிழ்நாடு கிராமப்புற மறுசீரமைப்பு திட்டத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட இயக்குநராகவும் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்