Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி மற்றும் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்பட 500 பேர் கைது…!

திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மாரிஸ் மேம்பாலப்பணிகள் மந்தமாக நடைபெறுவதை கண்டித்தும், திமுக அரசை
கண்டித்தும், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று(31-12-2024) திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்குஜெயலலிதா பேரவை மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தலைமை தாங்கி பேசினார். மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் முன்னிலை வகித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் ரத்தினவேல், அவைத் தலைவர் அய்யப்பன், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், ஜோதிவாணன், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி.பரமசிவம், மாவட்ட துணைச் செயலாளர்கள்
ஜாக்குலின், வனிதா, பத்மநாதன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன், ஜெயலலிதா பேரவை மாவட்ட துணை செயலாளர் சிந்தாமணி முத்துக்குமார், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் என்ஜினியர் இப்ராம் ஷா, மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் கோ.கு.அம்பிகாபதி, நிர்வாகிகள் பாலாஜி, நசீமா பாரிக், கலிலுல் ரகுமான் ,ஜோசப் ஜெரால்டு, ஏடிபி ராஜேந்திரன், ஜான் எட்வர்டு, அப்பாஸ், இலியாஸ், சகாபுதீன், ஐ.டி பிரிவு வெங்கட்பிரபு, பாலக்கரை சதர், பகுதி செயலாளர்கள் எம்ஆர்ஆர் முஸ்தபா, என்.எஸ். பூபதி, சுரேஷ்குப்தா, ரோஜர், கலைவாணன், அன்பழகன், ஏர்போர்ட் விஜி, வெல்லமண்டி சண்முகம், நாகநாதர் பாண்டி, புத்தூர் ராஜேந்திரன், பொதுக்குழு வெல்லமண்டி பெருமாள், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் முல்லை சுரேஷ், முத்துமாரி, சசிகுமார், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன்.

வக்கீல்கள் சுரேஷ்,சேது மாதவன், சுரேஷ், கங்கைமணி, தினேஷ்பாபு, கௌசல்யா, முன்னாள் கோட்டத் தலைவர்கள் ஞானசேகர், கல்லுக்குழி மனோகரன், இளைஞர் அணி டி.ஆர்.சுரேஷ்குமார், நிர்வாகிகள் ரஜினிகாந்த், அப்பாகுட்டி, டிபன் கடை கார்த்திகேயன், கிருஷ்ணமூர்த்தி,
வசந்தம் செல்வமணி, எடமலைப்பட்டிபுதூர் வசந்தகுமார், கிராப்பட்டி கமலஹாசன், சிங்காரவேலன், முத்துக்குமார், என்ஜினியர் ரமேஷ், சிங்கமுத்து, காசிபாளையம் சுரேஷ்குமார், கேபி ராமநாதன், ஜெயக்குமார், அரப்ஷா, குருமூர்த்தி, உறையூர் சாதிக், அக்பர் அலி, எனர்ஜி அப்துல் ரகுமான், கே.கே.நகர் சதீஷ், கருமண்டபம் சுரேந்தர், இன்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், ஆதவன், ஆசைத்தம்பி, உறந்தை மணிமொழியன், ராஜாளி சேகர், முருகானந்தம், வண்ணாரபேட்டை ராஜன், வாழைக்காய் மண்டி சுரேஷ், பாலக்கரை ரவீந்திரன், சக்திவேல், தொழிற்சங்கம் அவை நேசன், முருகன், எடத்தெரு பாபு, எடத்தெரு வாசுதேவன், எஸ்.கே.டி.பாண்டியன், நாராயணன், தென்னூர் ஷாஜகான், உடையான்பட்டி செல்வம், ரமணிலால், கேபி ராமநாதன், ஈஸ்வரன், தியாகராஜன் , கேபி கண்ணன், ராமலிங்கம், நத்தர்ஷா, கயிலை கோபி, சையது ரபி, வைத்தியலிங்கம், ஜெயகுமார், பாசறை நிர்வாகிகள் பரத்குமார், கார்த்திக், ராதாகிருஷ்ணன், செந்தில்நாதன், விக்னேஷ், நாகராஜன் மற்றும் மார்க்கெட் பிரகாஷ், டைமண்ட் தாமோதரன் ,ஐ.டி பிரிவு நாகராஜ், கே.டி அன்புரோஸ், கே.டி.ஏ. ஆனந்தராஜ், ஒத்தக்கடை மகேந்திரன், ஒத்தக்கடை மணிகண்டன், குருமூர்த்தி, ஆரி, ஜெபா, பொம்மாசி பாலமுத்து, ஜெகதீசன், சிந்தை ராமச்சந்திரன், என். பி.வெங்கடாசலம், பொன். அகிலாண்டம், தர்கா காஜா, வெஸ்லி, கட்பீஸ் ரமேஷ், கயிலைகோபி, செல்லப்பன், என்.டி மலையப்பன், கல்லுக்குழி முருகன், உறந்தை முத்தையா கே.சி.பி ஆனந்த், ராஜாளி சேகர்,சந்திரசேகர், சிந்தாமணி கிருஷ்ணன், ஜெயந்தி சிவா உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர் .தொடர்ந்து அதிமுகவினர் கோஷங்கள் எழுப்பியவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்பட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்