திருச்சி பாய்லர் ஆலை மருத்துவமனையில் நோயாளியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு…
மர்ம நபருக்கு போலீசார் வலை வீச்சு..
திருச்சி திருவெறும்பூர் பகுதியில் பாய்லர் ஆலை இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள், அவரது குடும்பத்தினர், ஓய்வு பெற்ற ஊழியர்கள் மருத்துவ வசதி பெறுவதற்காக ஆலை வளாகத்தில் மருத்துவமனை அமைந்துள்ளது. இதில், ஓய்வு பெற்ற ஊழியர் பாலகிருஷ்ணனின் மனைவி தமிழ்ச்செல்வி (வயது 65) என்பவர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று ( 07.06.2023 ) மஞ்சள் நிற டீ சர்ட் அணிந்த மர்ம நபர் ஒருவர் பகலில் மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் அவர், யாரும் எதிர்பாராத வகையில் தமிழ்ச் செல்வியின் முகத்தில் மயக்க ஸ்பிரேயை அடித்து கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலி பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பெல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.