Rock Fort Times
Online News

மாரியம்மன் கோவிலுக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதி 3 பேர் பலி..

சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. இக்கோயிலுக்கு ஆடி மாதம் முழுவதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள மேலநீலிந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆடிவெள்ளியை முன்னிட்டு இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை வந்தனர் இன்று சாத்தூர் அருகே நல்லி பகுதியில் அவர்கள் வந்தபோது, நெல்லையில் இருந்து சிவகங்கைக்கு சிமெண்ட் லோடு ஏற்றிச்சென்ற லாரி பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மேலநீலிந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் மகேஸ், (35) பவுன்ராஜ் (45) முருகன் (45) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்