Rock Fort Times
Online News

விருதுநகரை உலுக்கிய 3 படுகொலை: போலீசில் சரணடைந்த விவசாயி…!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிளந்தாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரவேலு (47). விவசாயத் தொழிலாளியான இவருக்கு பூங்கொடி என்ற மனைவி, 5 மற்றும் 10 வயதில் இரண்டு பெண் குழந்தைகள். இந்தநிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக விவசாயி சுந்தரவேலு இன்று(21-06-2025) காலை மனைவி மற்றும் 2 குழந்தைகளை வெட்டி படுகொலை செய்துவிட்டு தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா போலீசார் 3 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த விருதுநகர் மாவட்ட எஸ்பி கண்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குடும்பத் தகராறு காரணமாக அம்மிக்கல் குளவி மற்றும் அரிவாள் ஆகியவற்றைப் பயன்படுத்தி 3 பேரையும் சுந்தரவேலு கொலை செய்தது தெரியவந்தது. இந்த 3 படுகொலைகள் விருதுநகரை உலுக்கி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்