திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள லிங்கவாடியை சேர்ந்தவர் முருகன். இவர் தன்னுடைய உறவினர் இல்ல திருமணத்துக்காக மனைவி, மகனுடன் நத்தம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மதுரை –நத்தம் முடக்குசாலை பகுதியில் இருசக்கர வாகனம் மீது தனியார் பள்ளி வாகனம் மோதியது.
இதில், சம்பவ இடத்திலேயே முருகன் (40), அவரது மனைவி பஞ்சு, 6 வயது மகன் ஸ்ரீதர் ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Comments are closed.