Rock Fort Times
Online News

செல்போன் கடையில் தகராறு: போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் கைது…

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பெருமாள் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் (வயது 26 ).இரண்டாம் நிலை காவலரான இவர் தற்போது திருச்சி ஐ.ஜி.அலுவலக அதிவிரைவுப் படையில் பணியாற்றி வருகிறார். திருச்சி சுப்பிரமணியபுரத்தில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார். அவரது செல்போன் பழுதடைந்தது. அதனை சரி செய்வதற்காக திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் பழுது நீக்குவதற்காக கொடுத்தார். அதனை சரி செய்வதற்கு கடையில் உள்ள வாலிபர் அதிக தொகை கேட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த வாலிபருக்கும், போலீஸ்காரருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது கோபத்தில் திருச்சி கருமண்டபம் ஐ.ஓ.பி நகர் பகுதியைச் சேர்ந்த கடைக்காரர் சிராஜுதீன் (24 ), கடை ஊழியர் நூர்தீன் ஆகிய இருவரும் சேர்ந்து போலீஸ்காரரை திட்டி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரதீப் கண்ட்டோன்மெண்ட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிராஜுதீனை கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்