Rock Fort Times
Online News

சமயபுரத்தில் டாஸ்மாக் பாரில் வாலிபர் வெட்டிக்கொலை

மண்ணச்சநல்லூர் அருகே சமயபுரம் நால்ரோட்டில் அரசுக்கு சொந்தமான இரண்டு டாஸ்மாக்கடைகள் உள்ளன. இந்த இரண்டு கடைகளிலும் பார் இயங்கி வருகிறது. சமயபுரம் அருகே உள்ள சேனிய கல்லுக் குடியைச்சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் பாபு (வயது 28). இவர் சமயபுரத்தில் உள்ள பூக்கடையில் மாலை கட்டும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். மதுகுடிக்கும் பழக்கம் உள்ள இவர் நேற்று இரவு சமயபுரம் நால்ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் மது குடித்துக்கொண்டிருந்தார். அப்போது, சமயபுரம் அருகே உள்ள வீ. துறையூரை சேர்ந்த சிலர் அங்கே மது அருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்களுக்கும், பாபுவுக்கும் இடையே வாக் குவாதம் ஏற்பட்டது. அப்போது, அவர்கள் பாபுவை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். ஆனால் அவர் செல் லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் பாபுவிற்கும், கொலையாளிகளுக்கும் இடையே கடந்த சில நாட்க ளாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும்

பக்தர்களை கோவிலுக்குள் அழைத்துச் செல்வதில் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக பாபு கொலை செய்யப்பட் டது தெரியவந்தது.  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். வெளியூரிலிருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களிடம் திருட்டுத்தனமாக மது பாட் டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. எனவே மது விற்ப னையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்