திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தகவல் தொழிநுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை சார்பில் “இந்தியா சுதந்திரம் 2024”
என்ற பெயரில் இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதிய இணையதள சேவையை திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல்.ரெக்ஸ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தகவல் தொழிநுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லோகேஸ்வரன், கிழக்கு தொகுதி ஒருங்கிணைப்பாளர் அரிசிகடை டேவிட், மேற்கு தொகுதி ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், திருச்சி மாநகர மகிளா காங்கிரஸ் தலைவர் ஷீலா ஷெலஸ், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிவேல் அண்ணாதுரை, ஐஎன்டியுசி அமைப்புசாரா துறை தலைவர் முஸ்தபா , பட்டதாரி அணிதலைவர் ரியாஸ், ஏர்போர்ட் காங்கிரஸ் கோட்ட தலைவர் கனகராஜ் , ஓ.பி.சி. மாவட்ட காங்கிரஸ் செயலாளர் பகதூர்ஷா , 54-வது வார்டு தலைவர் விஜய் பக்தன் மற்றும் செந்தில், கிளமண்ட் , மகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.